
புதுடெல்லி: பாபா ராம்தேவின் பதஞ்சலி புட்ஸ் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டாளர்களின் (புரோமோட்டர்கள்) பங்குகளை தேசிய மற்றும் மும்பைப் பங்குச் சந்தை முடக்கியுள்ளது. இதனால், பங்குச் சந்தையில் அதன் மதிப்பு சரிந்துள்ளது.
பதஞ்சலி புட்ஸ் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் அதன் முதன்மை முதலீட்டாளர்கள் வசம் 80.82 சதவீதம் உள்ளது. பொது முதலீட்டாளர்கள் (மக்கள்) வசம் 19.18 சதவீதம் பங்கு மட்டுமே உள்ளது. செபி விதிப்படி, நிறுவனத்தின் முதன்மை முதலீட்டாளர்களிடம் 75 சதவீதமும், பொது முதலீட்டாளர்களிடம் 25 சதவீதமும் பங்கு இருக்க வேண்டும். இதைக் கடைபிடிக்கத் தவறியதால் பதஞ்சலி புட்ஸ் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டாளர்களின் பங்குகள் முடக்கப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment