
திருவனந்தபுரம்: உலகின் சக்திவாய்ந்த அமைப்பாக கருதப்படும் ஜி-20-ல் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென்னாப்பிரிக்கா, சவுதிஅரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த அமைப்பின் தலைமை பொறுப்பை கடந்த டிசம்பர் 1-ம் தேதி இந்தியா ஏற்றது. இதையொட்டி ஓராண்டு முழுவதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜி - 20 அமைப்பின் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜி 20 அமைப்பின் 4 நாள் மாநாடு கேரளாவின் புகழ்பெற்ற சுற்றுலாதலமான குமரகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஜி 20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், ஐ.நா. சபை, உலக வங்கியின் பிரதிநிதிகள் உட்பட 120 பேர் பங்கேற்று உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment