
புதுடெல்லி: நிறுவனங்கள் நாளை முதல் தங்கள் நிறுவனத்தின் வரவு, செலவுகணக்குகளை நிர்வகிக்கப் பயன்படுத்தும் மென்பொருளில் ஆடிட் டிரையல் எனப்படும் தணிக்கை சோதனை வசதியை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் என்று மத்திய நிறுவன விவகார அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
நிறுவனங்கள் தங்கள் மென்பொருளில் ஆடிட் டிரையல் வசதியை கொண்டிருக்கும்படி 2021 மார்ச் மாதத்தில் மத்திய நிறுவன விவகார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. 2022 ஏப்ரலில் மீண்டும் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், நடப்பாண்டு ஏப்ரல் 1 முதல் அனைத்து நிறுவனங்களும் ஆடிட் டிரையல் வசதியைக் கொண்டிருப்பதை கட்டாயமாக்கியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment