
சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 அதிகரித்து, ரூ.43,400-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் 2-ம் தேதி ஒரு பவுன் ரூ.44,040-க்கு விற்பனையாகி, புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர் ஏற்ற இறக்கமாக இருந்த தங்கத்தின் விலை கடந்த 10-ம்தேதி முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.360 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.43,400-க்கு விற்பனையானது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.45 உயர்ந்து, ரூ.5,425-க்கு விற்பனையானது. இதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.47,296-க்கு விற்பனையானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment