
புதுடெல்லி: பங்குச் சந்தையில் பரிவர்த்தனைகள் மேற்கொண்டது தொடர்பான விவரங்களை ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பணியாளர் அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.
பங்கு அல்லது பங்குச் சந்தை சார்ந்த இதர முதலீடுகளில் ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிவர்த்தனைகளின் மதிப்பு ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளின் ஆறு மாத அடிப்படை ஊதியத்துக்கு அதிகமாக இருந்தால் அதுகுறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment