
உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு நிறுவனம், நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக காளான் வளர்ப்பு மூலம் பொருளாதார முன்னேற்றத்தை உருவாக்குவதற்கான புதிய முயற்சியை எடுத்துள்ளது.
இதன்படி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தேசிய காளான் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி சுதீர்குமார் அன்னேபு, உதகையில் உள்ள மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு மையத்தின் தலைவரும், விஞ்ஞானியுமான சுந்தராம்பாள் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து நீலகிரி மாவட்டத்தில் உண்ணக் கூடிய மற்றும் மருத்துவ குணம் கொண்ட காளான்களை பயிரிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment