
இந்திய ரிசர்வ் வங்கி, 2022-23 நிதியாண்டுக்கான 309 பக்க ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை - கடன் தொகை, பணவீக்கம், அந்நிய செலாவணி கையிருப்பு, கரன்சி மேலாண்மை பற்றி விரிவாகப் பேசுகிறது.
இவ்வறிக்கையை ரிசர்வ் வங்கியின் ஆளுநர், அரசுக்கு (நிதித்துறைச் செயலருக்கு) அனுப்பி இருக்கிறார். ஆனால் இது, அரசுக்கு அறிக்கை என்றில்லாமல், அரசின் அறிக்கையாகவே அமைந்திருக்கிறது. உலக நிதிச் சந்தையில் நிலையற்ற தன்மை பின்வாங்கி உள்ளது. சில முன்னேறிய நாடுகளில் வங்கிகள் சந்தித்த தோல்விகளால் நிதி நிலைத்தன்மைக்கு ஏற்பட்ட ஆபத்துகள் தளர்ந்து உள்ளன என்று அந்த அறிக்கை தொடங்குகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment