
மும்பை: முகம் தெரியாத இமயமலை சாமியாரின் வழிகாட்டுதலின்படி பங்குச்சந்தையை நடத்தியதாக செபியால் குற்றம்சாட்டப்பட்ட தேசியப் பங்குச் சந்தை முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணன் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மும்பையில் உள்ள அவரது வீடு, அலுவலகம் அவருக்குத் தொடர்பான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்தச் சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த சித்ரா ராமகிருஷ்ணன்? - 2013 முதல் 2016 ஆம் ஆண்டுவரை தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் செயல் அதிகாரியாகவும், அதன் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார். பின்னர் அவர் தனிப்பட்ட காரணங்களால் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி பணியிலிருந்து விலகினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment