
புதுடெல்லி: கடந்த 8 ஆண்டுகளாக அரசு எடுத்து வரும் சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டில் தொழில் தொடங்குவது மேலும் எளிதாகியுள்ளது என்று பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்ட வழக்கொழிந்து போன சட்டங்கள் நீக்கப்பட்டன. இதனால் தொழில் தொடங்குவது எளிதானது. சீர்திருத்தம், செயல்படுவது மற்றும் மாற்றம் என்பதை இலக்காகக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் மூலம் நாட்டில் தொழில்முனைவோர் அதிகம் உருவாகி வருகின்றனர் இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment