
மும்பை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 0.5% ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அடிப்படை வட்டி விகிதம் 4.90% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் அடிப்படை வட்டி விகிதம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். 2020 மே மாதம் நடந்த கூட்டத்தில் வட்டி விகிதம் 4 சதவீதமாக குறைக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ரெப்போ விகிதம் மாற்றப்படாமல் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த முறை நடந்த நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment