
புதுடெல்லி: மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி பகிர்வாக ரூ.1.40 லட்சம் கோடியை மத்திய அரசு நேற்று ஒரே நாளில் விடுவித்தது. இது வழக்கத்தை விட இரண்டு மடங்காகும்.
ஜிஎஸ்டி வரி வருவாயை மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து வருகிறது. மாநிலங்களின் கரத்தை வலுப்படுத்த மூலதனம் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடுவதற்காக இந்தத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது 14-வது தவணையாக தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் ரூ.1 லட்சத்து 40,318 கோடியை மத்திய அரசு நேற்று விடுவித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment