
ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா மீண்டும் தனது ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணிநீக்கம் இந்த வாரத்தில் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
உலகின் மிப்பெரிய சமூக வலைதள நிறுவனமான மெட்டா, நிர்வாகத்தின் பொருளாதார சீர்திருத்தத்திற்காக, கடந்த 2022 நவம்பர் மாதத்தில் மேற்கொண்ட 13 சதவீத ஊழியர்களின் பணி நீக்கத்தினை விட அதிகமானவர்களை நீக்க இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக, மெட்டா நிறுவனம் தனது முந்தைய ஆள்குறைப்பு நடவடிக்கையின் போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 11,000 பேரை பணியில் இருந்து நீக்கியது. இந்தநிறுவனம் தனது நிர்வாகத்தினை சீர்செய்யும் நடவடிக்கையாக, அவசியம் இல்லாமல் இருக்கும் குழுக்களை நீக்கும் நடவடிக்கையில் ஏற்கெனவே ஈடுபட்டு வந்ததாக ப்ளூம்பெர்க் நிறுவனம் பிப்ரவரியில் தெரிவித்திருந்தது. இந்த நடவடிக்கை இறுதி செய்யப்படும்போது ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலை இழப்புக்கு வழிவகுக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment