
நாமக்கல்: மூலப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக விநாயகர் சதுர்த்திக்காகத் தயார் செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் விலை கடந்தாண்டை விட 100 சதவீதம் உயர்ந்துள்ளது என குமாரபாளையத்தைச் சேர்ந்த வியாபாரி தெரிவித்தார்.
வரும் செப்டம்பர் 18-ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக இந்தாண்டு விநாயகர் சிலைகளின் விலை உயர்ந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment