
கோவை: நன்கொடை, வீட்டுக் கடன் உள்ளிட்ட பெயர்களில் பொய் தகவல்களை தெரிவித்து வரி சலுகைகள் பெறுவோரை கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி பயன்படுத்தப்படுவதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருமான வரி செலுத்த தகுதியுடையவர்கள் ஆண்டுதோறும் ஜூலை 31-ம் தேதிக்குள் படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோவை வருமான வரித்துறை தலைமை ஆணையர் அலுவலகத்தின் கீழ் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. தற்போது பெரும்பாலும் ஆன்லைன் முறையில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யப்படுகின்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment