
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை மீண்டும் இதுவரையில்லாத உச்சத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 474 புள்ளிகள் (0.71 சதவீதம்) உயர்வடைந்து 67,571 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 146 புள்ளிகள் (0.74 சதவீதம்) உயர்ந்து 19,979 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சற்றே சரிவுடன் தொடங்கியது. காலை 10:21 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 109.24புள்ளிகள் சரிவடைந்து 66,988.20 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 33.85 புள்ளிகள் சரிந்து 19,799.30 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment