
சென்னை: தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 56.77 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அதன் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பி. ரமேஷ் பாபு கூறியுள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் வங்கியின் வர்த்தக வளர்ச்சி, லாபம், சொத்துகளின் தரமதிப்பு சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது. கரூர் வைஸ்யா வங்கியின் ஒட்டுமொத்த வர்த்தகம் ரூ.1,47,671 கோடியை கடந்துள்ளது. இது, எங்களது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையின் வாயிலாகவே சாத்தியமாகியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment