
புதுடெல்லி: சகாரா குழும கூட்டுறவு சங்கங்களில் முதலீடு செய்தவர்களுக்கு, பணத்தை திரும்பிச் செலுத்த தனி இணையதளத்தை மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார்.
சகாரா குழும கூட்டுறவு சங்கத்தில் சகாரா கடன் கூட்டுறவு சங்கம், சகாராயன் யுனிவர்சல் பல்நோக்கு சங்கம், ஹூமாரா இந்தியா கடன் கூட்டுறவு சங்கம், ஸ்டார்ஸ் பல்நோக்கு கூட்டுறவு சங்கம் ஆகியவை உள்ளன. இந்த கூட்டுறவு சங்கங்களில் சுமார் 2.5 கோடி பேர் ரூ.30,000 கோடி வரை பணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் முதலீட்டாளர்களுக்கு வர வேண்டிய பணத்தை கொடுக்க சகாரா - செபி ரீஃபண்ட் கணக்கில் இருந்து ரூ,5,000 கோடியை வழங்க உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment