
நாமக்கல்: போதிய ஆர்டர் இல்லாததால் குமாரபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் இயங்கும் விசைத்தறிக் கூடங்களில் ஜவுளி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குமாரபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் ஜவுளி உற்பத்தி தொழில் பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைத் தறி மற்றும் விசைத் தறி மூலம் ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் கணிசமான எண்ணிக்கையில் விசைத் தறிக் கூடங்கள் இயங்கி வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment