
ஜெனிவா: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடுகளின் வழியே இந்தியாவில் வேளாண் துறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வரமுடியும் என்று உலக பொருளாதார கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தெலங்கானா அரசு அந்த மாநில வேளாண் துறையில், உலக பொருளாதார கூட்டமைப்பின் உதவியுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. முதற்கட்டமாக 7,000 மிளகாய் உற்பத்தி விவசாயிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தெலங்கானா அரசு இவ்வாண்டில் இரண்டாம் கட்டமாக 20 ஆயிரம் மிளகாய் மற்றும் கடலை விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்களைக் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment