
லக்னோ: எஸ்யுவி கார்களை ஏற்றிச் செல்வ தற்காக இரண்டு அடுக்குகளைக் கொண்ட ரயில் பெட்டிகளை 2 வாரத்தில் அறிமுகம் செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
கார் தொழிற்சாலைகளில் இருந்து பிற இடங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு கார்களை குறைந்த செலவில் ஏற்றிச் செல்ல ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் மூடப்பட்ட 2 அடுக்குகளைக் கொண்ட சரக்கு பெட்டிகள் (பிசிஏசிபிஎம்) இப்போது பயன்பாட்டில் உள்ளன. இதில் சிறிய கார்களை 2 அடுக்குகளிலும் ஏற்றிச் செல்ல முடியும். ஆனால் எஸ்யுவி கார்களாக இருந்தால் ஒரு அடுக்கில் மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும். அதாவது 27 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலில் 318 சிறிய கார்களை ஏற்றிச் செல்ல முடியும். அதேநேரம் 135 எஸ்யுவி கார்களை மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment