
மும்பை: பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் (ஆர்ஹெச்எப்எல்) மற்றும் தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் 3 பேருக்கு பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) தடை விதித்துள்ளது. நிறுவனத்தின் பங்குகளை முற்றிலுமாக பூஜ்ய நிலைக்கு தள்ளியது தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக `செபி' தெரிவித்துள்ளது.
அனில் அம்பானி மற்றும் அமித் பாப்னா, ரவீந்திரா சுதாகர், பிங்கேஷ் ஆர் ஷா ஆகியோரும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 100 பக்க அறிக்கையை `செபி' வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நான்கு பேரிடம் எத்தகைய பங்குச் சந்தை சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment