
புதுடெல்லி: ஆயுள் காப்பீட்டு கார்ப்பரேஷன் (எல்ஐசி) பொதுப் பங்கு வெளியிட ஆயத்தமாகி வருகிறது. இதற்காக கடந்த மாதம் இயக்குநர்கள் குழுவில் 6 சுயேச்சையான இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இயக்குநர் குழுவின் நிர்வாக நடைமுறைகளுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றும் விதமாக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் நிதி சேவைகள் துறை செயலர் அஞ்சுலி சிப் துகால், `செபி' முன்னாள் உறுப்பினர் ஜி. மகாலிங்கம், எஸ்பிஐ லைப் முன்னாள் நிர்வாக இயக்குநர் சஞ்ஜீவ் நுடியால் ஆகியோர் இயக்குநர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள புதிய சுயேச்சை இயக்குநர்களாவர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment