
மும்பை: ரஷ்ய – உக்ரைன் போரை தொடர்ந்து சமையல் எண்ணெய்க்கு ஏற்பட்ட தட்டுப்பாடு, பாமாயில் இறக்குமதிக்கு இந்தோனேசியாவிதித்த தடை போன்ற காரணங்களால் அதானி வில்மர் நிறுவனத்துக்கு மறைமுக பலன்களை தந்ததாக கூறப்படுகிறது. அதுபோலவே பிப்ரவியில் பட்டியலிடப்பட்ட அதானி வில்மரின் பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் லாபமும் கிடைத்துள்ளது. அதானி வில்மர், ரூச்சி சோயா உள்ளிட்ட இந்திய நிறுவனங்களும் லாபம் ஈட்டியுள்ளன.
அதானி நிறுவனமும், சிங்கப்பூரைச் சேர்ந்த வில்மர் நிறுவனத்துடன் இணைந்து சமையல் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அதானி வில்மர் சார்பில் பார்ச்சூன் என்ற பெயரில் சமையல் எண்ணெய், கோதுமை மாவு, அரிசி, பருப்பு வகைகள், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு வகை உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment