
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 123 புள்ளிகள் (0.21 சதவீதம்) உயர்வடைந்து 60,348 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 42 புள்ளிகள் (0.24 சதவீதம்) உயர்வடைந்து 17,754 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. காலை 09:56 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 161.97 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,062.49 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 45.00 புள்ளிகள் சரிந்து 17,666.45 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment