
கோவை: மின் கட்டணம் அதிகரிப்பு, கழிவுப் பஞ்சு விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் தமிழகம் முழுவதும் நேற்று 400 ஓபன் எண்ட் (ஓ.இ) நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளன.
இதனால் நேற்று ஒரே நாளில் ரூ.20 கோடி மதிப்பிலான நூல் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். கழிவுப் பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் பணி ஓ.இ நூற்பாலைகளில் மேற்கொள்ளப் படுகிறது. மின் கட்டண உயர்வு மற்றும் கழிவுப் பஞ்சு விலை உயர்வு ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் தமிழகம் முழுவதும் 400 ஓஇ நூற்பாலை கள் நேற்று முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment