
சென்னை: தமிழகத்தில் ரூ.54 ஆயிரம் கோடி மூதலீடு செய்துள்ளதாகவும், தற்போது 1775 பெட்ரோல் நிலையங்களை தமிழகத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு செயல் இயக்குநர் வி.சி.அசோகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு புதிய திட்டங்களுக்காக இந்தியன் ஆயில் நிறுவனம் ரூ.54 ஆயிரம் கோடியை மூதலீடு செய்துள்ளது. இதில் முக்கியமாக நாகப்பட்டினத்தில் உள்ள நரிமணம் பகுதியில் ஒரு ஆண்டுக்கு 9 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோல், டீசல் போன்றவற்றை உற்பத்தி செய்யும் வகையில் ரூ.35,580 கோடியில் புதிதாக கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment