
சென்னை: தமிழகத்தில் உற்பத்தி ஆலையைக் கொண்டுள்ள ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் நாட்டிலேயே முதல்முதலாக ஸ்மார்ட் மொபிலிட்டி தீர்வை வழங்கும் நிறுவனமாகவும், அதிக கார்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாகவும் விளங்கி வருகிறது.
இந்நிறுவனம் நேற்று `எக்ஸ்டர்' என்ற பெயரில் புதிய சிறிய எஸ்யுவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. 40-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், இந்த ரக கார்களிலேயே முதல்முறையாக அறிமுகமாகும் 20-க்கும் மேற்பட்ட சிறப்பு அம்சங்கள் ஆகியவற்றுடன் இது அறிமுகமாகியுள்ளது. இந்த கார் ரூ.5.99 லட்சம் முதல் ரூ.9.99 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment