
ஓசூர்: நிலையான விலை, சந்தை வாய்ப்பு உள்ளதால், ஓசூர் பகுதியில் கோவக்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், 3 ஆண்டுகள் வரை பலன் அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் ஏரி, குளம் உள்ளிட்ட நீராதாரங்கள் மற்றும் விளை நிலத்தில் உள்ள வேலிகளில் படர்ந்து கொடிகளில் காய்த்து தொங்கும் கோவக்காயைக் கிராம மக்கள் தங்கள் சமையலுக்கு பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் நீர் ஆதாரங்களில் இக்கொடிகளைப் பார்ப்பது அரிதாகியுள்ளது. தற்போது, மருத்துவ குணங்கள் நிறைந்த கோவக்காயின் பயன்பாடு நகரப்பகுதியில் அதிகரித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment