
ஈரோடு: ஜி.எஸ்.டி குறித்து அமலாக்கத் துறையும் விசாரணை நடத்த அனுமதிப்பது, வணிகர்களை அச்சுறுத்தும் செயல், என தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் பங்கேற்ற விக்கிரமராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜி.எஸ்.டி அமல்படுத்தப் பட்டபோது, வரி ஏய்ப்பு தடுக்கப்படும். அரசுக்கு கூடுதல் வரி வருவாய் கிடைக்கும். வணிகர்கள் நலன் பாதுகாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு பிறகு இதுவரை 12 முறை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment