
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் புதிய டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தும் திட்டம், 25 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் உட்பட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பட்ஜெட்டில் மாதாந்திர சம்பளதாரர்கள் வரிச்சலுகை கிடைக்கும் என்று அதிகம் எதிர்பார்த்தனர். 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் நிச்சயம் சலுகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியிருந்தது. வருமான வரி விதிப்புக்குப் பதிலாக செலவு வரி விதிக்கலாம் என்று பலர் பரிந்துரைத்திருந்தனர். இதனால் பரவலாக வரிச்சலுகை இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment