
கடலூர்: கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதியுடன் நிறைவடைந்த 2021-2022 நிதியாண்டில், என்எல்சி இந்தியா நிறுவனம், ரூ.1,237 கோடி நிகரலாபம் ஈட்டியுள்ளது. முந்தை நிதியாண்டின் லாபத்தை விட இது 22 சதவீதம் அதிகம்.
என்எல்சி இந்தியா நிறுவன குழுமத்தின் கடந்த நிதி ஆண்டிற்கான (2021-22) தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை செயல்பாடுகளை வெளியிடுவதற்காக அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுக் கூட்டம் திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்நிறுவனம், தனது துணை நிறுவனங்களையும் சேர்த்து அதிகபட்சமின் உற்பத்தி, மின்சக்தி ஏற்றுமதி, நிலக்கரி உற்பத்தி, பழுப்பு நிலக்கரி விற்பனை போன்ற துறைகளில் கடந்த 2021-22ம் நிதியாண்டில் அதன் வரலாற்றில், புதிய சாதனைகளைப் படைத்துள்ளதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment