
சென்னை: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) ‘பீமா ரத்னா’ என்ற புதியபாலிசித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது, பாதுகாப்பு மற்றும் சேமிப்பை வழங்கும் தனிநபர் சேமிப்பு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். வரையறுக்கப்பட்ட பிரீமியம், பணத்தை திரும்பப் பெறும்வசதிகள் இதன் சிறப்பு அம்சங்கள்.
இந்தப் பாலிசியை 15, 20, 25 ஆண்டுகளுக்கு எடுக்கலாம். பிரீமியம் செலுத்தும் காலம் பாலிசி காலத்தைவிட 4 ஆண்டுகள் குறைவு. பாலிசி காலத்தின் கடைசி2 ஆண்டுகளுக்கு, ஒவ்வோர் ஆண்டின் முடிவிலும் அடிப்படைத் தொகையில் தலா 25 சதவீதம் தொகை, ஆயுள் பயனாக வழங்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment