
புதுடெல்லி: டெஸ்லா கார்கள் விற்பனை செய்ய இந்திய அரசு அனுமதித்தால் மட்டுமே இந்தியாவில் உற்பத்தி ஆலை தொடங்குவது குறித்து தங்கள் நிறுவனம் முடிவு செய்யும் என்று அதன் நிறுவனர் எலான் மஸ்க் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
உலக அளவில் பேட்டரி கார்களில் சிறந்ததாக டெஸ்லா கார்கள் திகழ்கின்றன. இந்த கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய இறக்குமதி வரிச்சலுகை வழங்க வேண்டும் என அந்நிறுவனம் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைத்து உற்பத்தியைத் தொடங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்து இங்கு விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது என்று மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment