
வாடிக்கையாளர்கள் வங்கியை அணுகி கடன் கேட்டு விண்ணப்பித்து, அதற்கான அனைத்து நடைமுறைகள் முடிவடைந்த பின்னர் வங்கிக் கடன் கொடுக்க சம்மதிக்கும். கடன் வழங்கும் சமயம், வடிக்கையாளருக்கு ஒப்புதல் கடிதம் (Sanction Letter) ஒன்றை வழங்கும். இதில்தான் மிக மிக கவனம் தேவை என்று நிதி ஆலோசகர்கள் எச்சரிக்கின்றனர்.
இது குறித்து எழுத்தாளரும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொது மேலாளருமான 'குறள் இனிது' சோம.வீரப்பன் கூறும்போது, "உதாரணமாக, வாடிக்கையாளர் வங்கியில் ரூ.10 லட்சத்திற்கு வாகனக் கடன் பெற்று கார் வாங்குகிறார். அதற்கு வங்கி ஒப்புதல் கொடுக்கும். வாடிக்கையாளர் மார்ஜின் போக, ரூ.7.5 லட்சம் வாகனக் கடன் கொடுக்க ஒப்புதல் தருகிறது என்றால், அந்த கடன் என்னென்ன விதிமுறைகளுக்கு உட்பட்டு வாடிக்கையாளருக்கு வழங்கப்படுகிறது என்பது முக்கியம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment