
மும்பை: பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக தொழில் செய்து வரும் நாட்டின் முன்னணி வர்த்தக நிறுவனமான ரிலையன்ஸ், நுகர்வோர் பொருட்கள் வர்த்தகத்தில் பெரிய அளவில் களமிறங்குகிறது. இதற்காக ரிலையன்ஸ் ரீடெய்ல் கன்ஸ்யூமர் பிராண்டுகள் என்ற பெயரில் சொந்தமாக பிராண்ட் ஒன்று உருவாக்கப்படுகிறது. இதற்காக சிறிய நிறுவனங்களை கையப்படுத்தும் பணியிலும் ரிலையன்ஸ் இறங்கியுள்ளது. இதன் மூலம் நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பெப்சி என பல நிறுவனங்களுக்கும் கடும் போட்டி ஏற்படும் என தெரிகிறது.
இந்திய பொருளாதார சந்தையில் அதிக பங்கு வகிக்கும் தொழில்களான எண்ணெய், எரிவாயு மற்றும் டெலிகாம் ஆகியவற்றில் கோலோச்சும் இந்தியாவின் பெரும்பணக்காரர் முகேஷ் அம்பானி. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் பலவற்றிலும் தொழில்கள் தொடங்கி வெற்றிகரமாக செய்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment