
சென்னை: டாலர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட 50-வதுஆண்டை குறிக்கும் வகையில் புதிய இலச்சினையும், 2025-ம் ஆண்டுக்கான இலக்கும் நேற்று வெளியிடப்பட்டது. டாலர் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் வினோத் குமார் குப்தா முன்னிலையில் நிறுவனர் மற்றும் தலைவர் தீன் தயாள் குப்தா புதிய இலச்சினையை வெளியிட்டார்.
டாலர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 1972-ம் ஆண்டு பவானி டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயருடன் தொடங்கப்பட்டது. தற்போது இந்நிறுவனம் நாட்டின் மொத்த உள்ளாடை விற்பனையில் 15 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. நிறுவன விரிவாக்கப் பணிகளுக்காக 2025-ம் ஆண்டுக்குள் ரூ.120 கோடி முதலீடு செய்து புதிய ரகங்களை அறிமுகப்படுத்தவும், திண்டுக்கல்லில் புதிய நூற்பு ஆலை தொடங்கவும் திட்டமிட்டுள்ளது. விநியோகத்தை எளிதாக்கவும், விரைவுபடுத்தவும் மற்றும் செலவுகளைக் குறைக்கவும் மேற்கு வங்க மாநிலம் ஜகதீஸ்பூர் பகுதியில் கிடங்குடன் கூடிய உள்ளாடை பூங்கா அமைக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment