
கோவை/திருப்பூர்/ஈரோடு/கரூர்/தேனி/விருதுநகர்: நூல் விலையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் நூல் வர்த்தகர்கள், பின்னலாடை நிறுவனங்கள் மேற்கொண்ட வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நேற்று சுமார் ரூ.650 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
நாட்டில் பருத்தி விலை கண்டி ஒன்றுக்கு (355 கிலோ) ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக தற்போது உயர்ந்துள்ளது. மத்திய அரசானது இறக்குமதி பஞ்சுக்கான 11 சதவீத வரியை வரும் செப்டம்பர் இறுதி வரை நீக்கியுள்ள நிலையிலும், உள்நாட்டில் பருத்தி பஞ்சு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பருத்தி விலை உயர்வால் நூல் உற்பத்தியாளர்கள் தொடங்கி, கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை என ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தி சங்கிலித் தொடரில் உள்ள அனைவரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment