
தீபாவளி பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 1,000 ஸ்பின்னிங் மில்கள் மற்றும் 300 ஓபன் எண்ட் நூற்பாலைகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜவுளித்தொழில் கடந்த சில மாதங்களாக காணப்பட்ட கடுமையான பஞ்சு விலை ஏற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்டது. 356 கிலோ பஞ்சு கொண்ட ஒரு கேண்டி பஞ்சு ஒரு லட்சம் ரூபாயை கடந்தது. இதையடுத்து பஞ்சு இறக்குமதி வரி ரத்து, யூக வணிகத்தை கண்காணித்தல், பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு கமிட்டி அமைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment