
பெங்களூரு: பண்டிகை நாட்களில் பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை ரொம்பவே அதிகம். அதுவும் பெங்களூரு மாதிரியான தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் நிறைந்த நகரத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். இந்நிலையில், பெங்களூரு நகரில் இருந்து ஹூப்ளிக்கு பேருந்தில் செல்வதற்கான கட்டணம் ரூ.5,000 என சொல்லி ட்விட்டர் தளத்தில் ஒரு போஸ்ட் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது விமான கட்டணத்தை விட அதிகம் என அதில் சொல்லப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் இருந்து சுமார் 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் பல்வேறு நகரங்களுக்கு இந்த பேருந்துகள் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment