
புதுடெல்லி: கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி இந்திய விண்வெளி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் டாடா குழுமம் உட்பட பல்வேறு தனியார் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழா டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் விண்வெளித் துறை யில் தனியாரும் பங்கேற்க கடந்த 2020-ம் ஆண்டில் அனுமதி வழங் கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் விண்வெளித் துறை சார்ந்த 102 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment