
சென்னை: எல்ஐசி நிறுவனம் காலாவதியான பாலிசிகளை மீட்க சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தாமல் விட்டுவிட்ட தங்களின் பாலிசிகளை அக்டோபர் 21-ம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ளலாம்.
இது தொடர்பாக எல்ஐசி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்த சிறப்பு புதுப்பிப்பு முகாமில், பங்குச் சந்தையுடன் இணைக்கப்படாத அனைத்து பாலிசிகளும், சலுகை தாமதக் கட்டணத்துடன் புதுப்பிக்கப்படும். பிரீமியம் செலுத்தாமல் நிறுத்தப்பட்ட தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் உள்ள அனைத்து பாலிசிகளும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு புதுப்பிக்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment