
கிராம மக்களுக்கு எளிதாக வங்கி சேவைகளை வழங்கும் வகையில் அஞ்சல் துறையில், ‘இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க்’ (IPPB) திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
பணத்தை சேமிக்க விரும்புவோர் இத்திட்டம் மூலமாக அருகில் உள்ள தபால்காரருக்கு தகவல் தெரிவித்தால், அவரே வீடு தேடி வந்து, புதிய அஞ்சலக கணக்கு ஆரம்பித்து கொடுப்பார். இதுதான் இத்திட்டத்தின் சிறப்பம்சம். நாடு முழுவதும் 650 கிளைகள், 3,250 சேவை மையங்களை கொண்டு தொடங்கப்பட்ட இந்திய அஞ்சலக வங்கியின் வாடிக்கையாளர் எண்ணிக்கை தற்போது 5 கோடியை தாண்டிவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment