
சென்னை: நிறுவனங்களின் மதிப்பைப் பாதுகாப்பதில் தணிக்கையாளர்களின் பங்களிப்பு குறித்த நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை இந்திய உள்தணிக்கையாளர்கள் அமைப்பின் (ஐஐஏ) சென்னைப் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வை ஐஐஏ சென்னைப் பிரிவின் தலைவர் ரவி வீரராகவன் தொடங்கிவைத்தார்.
நிறுவன மோசடிகளின் பரிணாமம் குறித்தும் அவற்றைக் கண்டறியும் வழிமுறை குறித்தும் தணிக்கைத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பேசினர். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நிறுவனங்களில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன என்றும் நவீன மோசடிகளை ஆரம்பநிலையிலேயே கண்டறியும் வகையில் உள்தணிக்கைத் துறை மேம்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment