
டிஜிட்டல் முறையில் செலுத்தப்படும் யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என நிதி அமைச்சகம் உறுதிபட தெரிவித்துள்ளது.
யுபிஐ சேவை நிறுவனங்கள் பணப் பரிவர்த்தனைக்கு ஒன்றுஅல்லது இரண்டு பைசா மட்டுமே கட்டணமாக வசூலிக்கின்றன. இதனால், சேவை நிறுவனங்கள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகிஉள்ளன. எனவே, செயல்பாட்டுசெலவினங்களை சமாளிக்கும் வகையில் நெப்ட் மற்றும் ஐஎம்பிஎஸ் உள்ளிட்டவற்றின் வாயிலான பணப்பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படுவது போல யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிப்பது அந்த நிறுவனங்களின் செயல்பாட்டுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கியின் ஆலோசனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment