
சென்னை: தங்கம் விலை தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குழப்பம், விற்பனை போட்டியை தவிர்க்கும் வகையில், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 தென் மாநிலங்களில் ஒரே விலையில் தங்கம் விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
அழகூட்டும் ஆபரண நகைகளாக மட்டுமின்றி, அவசர தேவைக்கு அடமானம் வைத்துபணம் பெறுவது, முதலீடு செய்வது என பலவிதத்திலும் தங்கம் பயன்படுவதால், இதைமக்கள் விரும்பி வாங்குகின்றனர். இந்தியாவில் சராசரியாக ஓராண்டில் 1,300 டன் தங்கம்விற்பனையாகிறது. இதில் 30 சதவீத தங்கம் தமிழகத்தில் மட்டும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment