
புதுடெல்லி: புதிய வண்ணத்தில் அக்சஸ் 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது சுசுகி நிறுவனம். பண்டிகை களம் நெருங்குவதை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு வண்ண வண்ண ஆப்ஷனை கொடுக்கும் நோக்கில் இதனை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இந்த ஸ்கூட்டர் அந்நிறுவனத்தின் பிரபல மாடல்களில் ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2006 வாக்கில் சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது இயக்கத்தை தன்னிச்சையாக தொடங்கியது. அதற்கு முன்னர் மாருதி மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களுடன் இணைந்து சுசுகி இயங்கி வந்தது. ஹரியாணாவில் இந்நிறுவனத்தின் உற்பத்திக் கூடம் இயங்கி வருகிறது. ஜப்பான் நாட்டை தலைமையிடமாக கொண்டு இந்நிறுவனம் இயங்கி வருகிறது. பைக் மற்றும் ஸ்கூட்டர்களை இந்தியாவில் உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது சுசுகி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment