
புதுடெல்லி: நான்காவது தொழிற்புரட்சிக்கு தலைமையேற்று வழி நடத்தும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தொழிற்துறை 4.0 மாநாடு நேற்று நடைபெற்றது. இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையை கனரக தொழில் துறை அமைச்சகத்தின் இணை செயலர் வாசித்தார். அதில் மோடி கூறியிருப்பதாவது: இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக உருவெடுக்க செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் அனைத்தையும் அரசு துரித கதியில் மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, சர்வதேச விநியோக சங்கிலியில் நமது தொழிற் துறை மற்றும் தொழில் முனைவோர்களின் பங்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளது. எனவே, நான்காவது தொழிற்புரட்சிக்கு தலைமையேற்று வழி நடத்தும் திறன் இந்தியாவுக்கு அதிகமாகவே உள்ளது. நான்காவது தொழிற்புரட்சி என்பது புதிய தொழில்நுட்பத்தைப் போலவே புதிய சிந்தனைகளையும் உள்ளடக்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment