
சென்னை: ஐ.டி. நிறுவனங்களில் வேலை இழப்புகள் 30 சதவீதமாக உயர்ந்துள்ளதால், வாழ்வாதார நெருக்கடியில் மென்பொறியாளர்கள் தவித்து வருகின்றனர். எனவே, ஐ.டி. துறைக்கென பிரத்யேக பணி பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனங்கள் பல ஆண்டுகளாக முக்கிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. இத்துறையை பொருத்தவரை அதிக அளவிலான ஊதிய உயர்வுகள், பணியாளர் பலன்கள், மிக முக்கியமாக வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான வாய்ப்புகள் பெரிதும் காணப்படுகின்றன. இதுவே பெரும்பாலானோர் இத்துறையை தேர்ந்தெடுப்பதற்கு காரணமாக இருக்கிறது. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இத்துறை 227 பில்லியன் டாலர் வளர்ச்சியை கண்டுள்ளதாகவும், இந்த வளர்ச்சி மூலம் நடப்பு நிதியாண்டில் 0.45 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment