
நம் பெரும்பாலானவர்களின் கனவு, லட்சியம் எல்லாமே சொந்தமாக ஒரு சின்ன வீட்டையாவது கட்டிவிட வேண்டும் என்பது. ஒரே படுக்கையறை கொண்ட வீடாக இருந்தாலும் பரவாயில்லை, அது நமக்கு சொந்த வீடாக இருக்க வேண்டும் என்பது நம் பெரும்பாலானவர்களின் மனங்களிலும் கனன்று கொண்டிருக்கும் நீங்காத ஆசை.
இந்தக் கனவு நிறைவேற முன்பை விட இப்போது அதிக சாத்தியக் கூறுகள் உருவாகியுள்ளன. வங்கிக் கடன், அதுவும் வீட்டுக் கடன் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டுக் கடனுக்கு மிகவும் குறைந்த அளவு வட்டி விகிதம் விதிக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. குறைந்தபட்சம் 6.95 சதவீதத்திலிருந்து கூட சில வங்கிகள் கடன் தருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment