
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (திங்கள் கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 60,000 நெருங்கியது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 50 புள்ளிகள் உயர்வு அடைந்து 17,850 ஆக இருந்தது.
கடந்த வாரத்தில் கடுமையான வீழ்ச்சியுடன் நிறைவடைந்த பங்குச்சந்தைகள் இன்று சரிவில் இருந்து மீளத்தொடங்கியது . காலை 09:39 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 441.05 புள்ளிகள் உயர்வடைந்து 60,286.34 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 73.20 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,880.00 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment